இதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 122.94 ரூபா என்ற அதிதாழ் மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவதை தடுக்கும் நோக்கில் அரசாங்க வங்கி டொலர்களை விற்பனை செய்தது.
இந்த நடவடிக்கை இலங்கை நாணயத்தின் பெறுமதியை பேணுவதற்காக இனிமேல் தலையிடுவதில்லை என்ற மத்திய வங்கியின் தீர்மானத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்க வங்கி, டொலரை ஒன்றை 123 ரூபாவுக்கு விற்ற பின்னர் படிப்படியாக 121 ரூபா என்ற மட்டத்துக்கு கொண்டு வந்ததுள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு அமெரிக்க டொலரின் விலையை 121 ரூபாவில் பேணுவதற்கு தார்மிக ரீதியான ஒத்துழைப்பை நாணய மாற்றுநர்கள் அளிக்க வேண்டும் என மத்திய வங்கி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட தொகையிலான டொலர்களே குறைந்த ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை நாணயத்தின் பெறுமதியை பாதுகாக்க தார்மிக ஊக்குதலை பயன்படுத்தவும் மத்திய வங்கி தயார் என ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
|
Tuesday, February 28, 2012
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவில் வீழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment